Sunday, May 20, 2018
நீயா பேசியது...
'நீயா பேசியது...' என்று தொடங்கும் திரையிசைப் பாடலின் இசையமைப்பை நுட்பமாகவே வித்யாசாகர் கையாண்டிருக்கிறார். காதலும் கோபமும் ஏக்கமும் கலந்த கலவையான தொனியில் பாடப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கும்.
'நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது...'என்று இருக்கும் சாதாரண வரிகள், பாடப்படும் போது கொள்ளும் பரிமாணங்களும் உணர்வுப் படிமங்களும் அலாதியானவை. 'நீயா பேசியது' என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்ப வெவ்வேறு தொனிகளில் சங்கர் மகாதேவன் பாடுவது அல்லது பிரயோகிப்பது நுட்பமான ரசனைக்குரியது. (நானும் அப்படிப் பாடிப் பார்க்கிறேன்.) ஈர்ப்பான சில வரிகள் உண்டெனினும் 'காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்...' என்ற வரியினை நடைமுறை அர்த்தத்தில், பொதுவில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது, 'தன் கூற்றாக' தனியொருவரின் நம்பிக்கையாக இருப்பதையும் காண முடிகிறது. பெரும்பாலான திரையிசைப் பாடல்களை நான் வரிகளுக்காக விரும்புவதில்லை என்பது வேறு விடையம்.
மிகவும் இலகுவாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கக் கூடிய சுழ்நிலை (situation) தான் இது. பாவம்...ஜோதிகாவை வெருட்டுவது போலவே விஜயின் நடிப்பு பல இடங்களில் அமைந்திருக்கிறது. இதில் விஜய் நடித்திருக்கும் ஒரு இடம் 'மெச்சத்தக்கதாக' உள்ளது. பாடலுக்கு வாய் அசைப்பதைத் தவிர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாகவே நடிப்பையும் காட்சியமைப்புக்களையும் இயக்குநர் கையாண்டிருக்க முடியும். (இது ஒரு 'மொக்கைப் படத்தின்' பாடல் என்பது கவனிக்கத்தக்கது.) இந்த இசையினை, 'உள்மனக் குமுறலின் காட்சிப் படிமங்களாக மிகவும் சிறப்பாகவே நகர்த்தியிருக்க முடியும்.
https://youtu.be/KrnwKDvn6dc
அமரதாஸ்
2017-05-31
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment