Sunday, May 20, 2018

நினைத்தேன் வந்தாய்...




'உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்...' போன்ற சொல்முறைகளும் இசையும் குரல்களும் இசைந்தெழுப்பும் படிமங்கள் இனிமையானவை, மகிழ்ச்சிகரமானவை, உள்ளுறையும் 'காதல்' உணர்வைப் பெருக்குபவை.

'நினைத்தேன் வந்தாய்...' என்று தொடரும் திரையிசைப் பாடலை, எத்தனையோ தடவைகள் பார்த்தாயிற்று, கேட்டாயிற்று. இசையமைத்த எம். எஸ்.விஸ்வநாதனும் பாடியிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் மகிழ்ச்சியின் படிமங்களை ஒலியலைகளில் விரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகளும் இடையிடையே செய்யும் 'உடற்பயிற்சி'களைச் சகித்துக்கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

திரையில் தோன்றும் இருவருமே இப்போது இல்லையென்ற நினைவு சடுதியாக வந்து உறுத்துகிறது. வாழ்க்கை நிரந்தரமில்லாதது தானே. இல்லாமல் போனவர்களையும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது காட்சியூடகம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இதில் அழகாயிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் 'காதல்' இருந்திருக்கும். இருந்தாலென்ன...யார் மீதும் யாருக்கும் எப்போதும் காதல் வருமென்பதுதானே நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.


https://youtu.be/0HnEPVGGA4w

அமரதாஸ்
2017-05-31

No comments:

Post a Comment