Tuesday, February 19, 2019

Tears of Tamils (Photo exhibition of Amarathaas)



''Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones''

ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், 2018-12-16 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones').



இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.

சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக் காட்சி  நிகழ்வில் கலந்துகொண்டனர்.







Genocide on Tamils - தமிழர்கள் மீதான இனப்படுகொலை


தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில், சில நிகழ்வுகள் நேற்று (2018-12-16) நடைபெற்றன. மனித உரிமைகள் சார் செயற்பாடுகளிலும் கலைச் செயற்பாடுகளிலும் ஊடகச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சிலரது கூட்டு முயற்சிகளால், நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே மண்டபத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றன.

மண்டபத்தின் ஒரு பகுதியில், சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களின் ஒளிப்படக் காட்சி நடைபெற்றது ('Tears of Tamils - Photographs of Amarathaas in Srilanka's war zones'). இன்னொரு புறத்தில் தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியக் காட்சி நடைபெற்றது. 





'Sri Lanka's Killing Fields' என்ற ஆவணப்படமும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தொகுக்கப்பட்டிருந்த ஆவணக்காட்சிகளும் வேறு சில ஆவணக்காட்சிகளும் திரையிடப்பட்டன.

இறுதி யுத்த காலத்தில், சுயாதீன ஊடகராக இருந்து பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான 'பொவி' என்பவர், இலங்கை நிலவரங்கள் தொடர்பிலான தனது பார்வைகளை உரை மூலம் வெளிப்படுத்தினார். இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்த சிலர், சாட்சிய உரைகளை நிகழ்த்தினர். 







தமிழர்களின் பிரச்சினைகளை சுவிஸ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நிகழ்வுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேவையான இடங்களில், ஜெர்மன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளிலும் தமிழர்கள் உட்பட சுவிஸ் நாட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூடியிருந்து உரையாடி இரவு உணவை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.






2018-12-17